தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் முதன்முறையாக தமிழக அரசு சார்பில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.ஆதிச்சநல்லூரில் 6ம் கட்ட அகழாய்வும், சிவகளையில் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் முதல் கட்ட அகழாய்வு பணிகளும் தொடங்கியுள்ளன. தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார்.