சென்னை: மின்கழக தொமுச பொதுச்செயலாளர் சிங்கார.ரத்தினசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பிரிவு தொழிற்சங்கங்கள் மற்றும் மின்வாரியத்தில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டு கூட்டம் கடந்த 21ம் தேதி நடந்தது. இதில், மின்சார தொழிலாளர் சம்மேளனம், மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மின்ஊழியர் மத்திய அமைப்பு, ஐஎன்டியுசி, பொறியாளர் சங்கம், மின்வாரிய தொழிலாளர் மற்றும் பொறியாளர் ஐக்கிய சங்கம், பொறியாளர் கழகம், பொறியாளர் யூனியன், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன.