சென்னையில் கொரோனா தொற்று 10 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 624   பேர் பாதிக்கப்பட்டனர். அதன்படி சென்னை முழுவதும்  9,989 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 70  பேர் உயிரிழந்துள்ளனர்.  5815   பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 60  பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்தது.

அதன்படி, சென்னை மண்டலங்களில்  ராயபுரத்தில்  1,889 பேர், கோடம்பாக்கத்தில்  1,391  பேர், திருவிக நகரில் 1,113 பேர்,  தேனாம்பேட்டையில் 1,050   பேர், தண்டையார்பேட்டையில் 974  பேர், அண்ணாநகரில்   829 பேர், வளசரவாக்கத்தில் 679 பேர், அடையாறில் 533 பேர், அம்பத்தூரில் 415   பேர்,  திருவொற்றியூரில் 274  பேர், மாதவரத்தில் 213 பேர்,  மணலியில் 126  பேர், சோழிங்கநல்லூரில்  160  பேர், பெருங்குடியில் 152 பேர், ஆலந்தூரில் 107   பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: