சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 624 பேர் பாதிக்கப்பட்டனர். அதன்படி சென்னை முழுவதும் 9,989 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 70 பேர் உயிரிழந்துள்ளனர். 5815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 60 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்தது.