சென்னை : சென்னை மாநகர போக்குவரத்து உதவி கமிஷனர் உட்பட 11 போலீசாருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகர காவல் துறையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஊரங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி கமிஷனர் மற்றும் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசார் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.