தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மா சீசன் தொடங்கிய நிலையில், கரும்புள்ளி நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பெரியாம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் பரவலாக மா சாகுபடி செய்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் மா சீசன் தொடங்கிய நிலையில், மாங்காய்களின் மேல் கரும்புள்ளி நோய் சமீபகாலமாக பரவி வருவது. இதனால், மாம்பழத்திற்கு சந்தையில் நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.