சட்டீஸ்கரில் நக்சல்கள் 2 பேர் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் நக்சலைட்கள் மிகுந்த மாநிலம். அங்குள்ள சுக்மா மாவட்டத்தின் மன்காபல் கிராமத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்ற போது நக்சலைட்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, போலீசாரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  மற்றவர்கள் காட்டில் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்களில் ஒருவர் மலாங்கீர் பகுதிக்கான மாவோயிஸ்டுகள் குழுவின் உள்ளூர் கொரில்லா படை தளபதி குன்டாத்தூர் என்று தெரிய வந்துள்ளது. மற்றொருவர் அய்த்து என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. குன்டாத்தூர் தலைக்கு 5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: