ராய்ப்பூர்: சட்டீஸ்கர் நக்சலைட்கள் மிகுந்த மாநிலம். அங்குள்ள சுக்மா மாவட்டத்தின் மன்காபல் கிராமத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்ற போது நக்சலைட்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, போலீசாரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காட்டில் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.