சென்னை: உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடின உழைப்பு, திறமை மூலம் இவ்வளவு பெரிய உயர்ந்த பதவியை அடைந்திருப்பது, இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும். நீண்டகாலம் நீங்கள் ஆற்றிய தொழிலுக்கு தற்போது மிக சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் சார்பில் உங்களை பாராட்டுவதோடு, உங்கள் பணி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.