திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே பலப்பநத்தம் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர், சென்னை வேளச்சேரி ராம் நகர் பகுதியில் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்த இவருக்கு காய்ச்சல், சளி பிரச்னை ஏற்பட்டது. அவரை சென்னை மருத்துவ குழுவினர் அவரது ரத்தம், சளி மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர். நேற்று முன்தினம் அந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சுகாதாரத்துறையினர் சென்ற போதுதான் அவர் ஊருக்கு சென்றது தெரியவந்தது. உடனடியாக அவருடைய புகைப்படத்தை திருப்பத்தூர் மாவட்ட போலீசார் மற்றும் சுகாதாரத் துறைக்கு அனுப்பினர்.