அமாவாசை நாளில் சதுரகிரி வெறிச்சோடியது

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த பங்குனி, சித்திரை மாதங்களில் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் பக்தர்கள், சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதேபோல நேற்று வைகாசி அமாவாசை தினத்திற்கும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடியது.

Related Stories: