ஹைதரபாத் : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் புதையல் எடுப்பதற்காக பெண்ணை நரபலி கொடுக்க முயன்றுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடிகண்ட்ரிகா கிராமத்தைச் சேர்ந்த சரஜம்மா என்பவரை நரபலி கொடுக்க முயன்ற பெண் ஆவார். வாய் பேச முடியாதவரை, அவரது உறவினர்களான சுப்பமா, சேஷாத்ரி தம்பதியினர் ஏரியின் அருகே அழைத்துச் சென்று இந்த கொடூர செயலில் ஈடுபடுத்தி இருக்கின்றனர். சேஷாத்ரி கையில் கத்தி இருப்பதை பார்த்த சராஜம்மா அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.