திருவள்ளூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், வெளி மாவட்டங்களில் சிக்கியவர்களின் இ - பாஸ் விபரம் அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு தேர்வு உள்ளிட்ட பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில், ஏராளமான மாணவர்கள், வேறு ஊர்களில் உள்ளனர். மாவட்டம் விட்டு, மாவட்டம் வர, தற்போது இ - பாஸ் பெற வேண்டியுள்ளது. இதனால், அந்த மாணவர்களின் விபரம் சேகரித்து, இ -பாஸ் பெற விண்ணப்பிக்க, தலைமை ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.