புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984ம் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் 6வது பிரதமராக மிக இளம் வயதில் ராஜிவ் காந்தி, பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு தமிழகத்தின் பெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தின்போது தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது 29வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.