விஏஓ ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில்  2016ல் நடந்த கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அத்தியூர் கிராம நிர்வாக அலுவலரான அமல்ராஜ் (29) என்பவரை கைது செய்தனர். இந்தநிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்சில் மனு விசாரிக்கப்பட்டது. அப்போது, அமல்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: