சென்னை: வங்கிகளில் திடீரென பாஸ்புக் என்ட்ரி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் வங்கிகள் தற்போது வழக்கம் போல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட தொடங்கியுள்ளன. தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை, கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்ட பிறகே வங்கியில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் முழுமையாக வங்கிகளில் பணிகள் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, வாடிக்கையாளர்களுக்கு பாஸ்புக் பதிவு, புதிய பாஸ்புக் வழங்கும் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக யாராவது அக்கவுன்ட் தொடங்கினாலும் அவர்களுக்கும் பாஸ்புக் வழங்கப்படுவது இல்லை. மாறாக அக்கவுன்ட் ஓபன் செய்ததற்கான அக்கவுன்ட் நம்பர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.