அரியலூர்: அரியலுார் அருகே ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பால் சுடுகாட்டுக்கு வெளியே சலுான் கடைக்காரர் உடல் தகனம் செய்யப்பட்டன. அரைகுறை பாகங்களை மீண்டும் தாயே எரித்த காட்சி வீடியோ வைராகி வருகிறது. அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த கர்ணன் மகன் கற்பககுமார் (22). தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரத்தில் சலூன் கடை நடத்தி வந்த இவர், கடந்த 6ம் தேதி தனது கடைக்கு பைக்கில் சென்றார். அப்போது கள்ளியூர் என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி காயமடைந்தார். தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கற்பக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 8ம்தேதி சிகிச்சை பலனின்றி கற்பகுமார் இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு கற்பககுமாரின் உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், 9ம் தேதி உடலை எரிக்க ஊரிலுள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது மாலை 4 மணியளவில் தகனமேடையில் எரியூட்டுவதற்காக தயார் நிலையில் இருந்த போது, தகவலறிந்து வந்த அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினர் சுடுகாட்டில் எரியூட்ட கூடாது என்றும், உங்கள் வழக்கப்படி புதைத்து கொள்ளுங்கள் என்றும் கூறி தடுத்துள்ளனர்.