திருவள்ளூர்: திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பல்ப் உட்பட பல்வேறு மின்சாதன பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, திருவள்ளூரில் விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவர் சத்யமூர்த்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கி பழகியவர்கள் என 20க்கும் மேற்பட்டவர்களை சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.