தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்..:வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்யக்கூடும் என்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

Related Stories: