திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாவட்டத்தில் கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் அவர்களின் ரத்த மாதிரி சேகரித்து சென்னை கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து பரிசோதனை முடிவு வர சில நாட்கள் ஆகின்றன. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறிய ஆய்வகம் திறப்பு
- கொரோனா வைரஸ் ஆய்வகத்தின் திறப்பு விழா
- திருவள்ளூர் அரசு மருத்துவமனை திருவள்ளூர் அரசு மருத்துவமனை
- திறப்பு விழாவின் கொரோனா வைரஸ் ஆய்வகம்