ஊரடங்கு மீறல் ஒரே நாளில் 4,749 பேர் கைது

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 4வது முறையாக மே 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 12 மாவட்டங்களில் தளர்வு இல்லை. இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.  அதன் அடிப்படையில், நேற்று ஒரே நாளில்  நோய் தொற்று பரப்பும் வகையில் வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும்  4 ஆயிரத்து 567 வழக்குகள் பதிவு செய்து 4 ஆயிரத்து 749 பேரை  போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அனைவரையும்  சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம்  இருந்து 3 ஆயிரத்து 174  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 13 லட்சத்து 85 ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Related Stories: