சென்னை: மாநகர் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிக்கு வந்துசெல்ல ஏதுவாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவான்மியூர் பேருந்து நிலையம், கொட்டிவாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் தலைமைச் செயலகக் காலனி, பீட்டர்ஸ் காலனி, தாடண்டர் நகர், கிண்டி, கீழ்க்கட்டளை, நங்கநல்லூர், கே.கே.நகர், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், தாம்பரம் கிழக்கு, மாதம்பாக்கம், பூவிருந்தவல்லி, அய்யப்பந்தாங்கல், வடபழனி, அண்ணா நகர் மேற்கு பணிமனை,