பெய்ஜிங் : சீன நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் இனி பொதுவெளியில் முக கவசம் அணிய தேவையில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி கண்டறியப்பட்ட கொரோனா இன்று உலகையே ஆட்டம் காண செய்துள்ளது. இந்த 5 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா பாதித்துள்ள நிலையில், உலக பொருளாதாரமே முடங்கியுள்ளது. உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதே வேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதலும், சமூக இடைவேளியும் இன்றியமையாததாக விளங்குகிறது.