கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தனது நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு அணி சார்பில் கோடிக்கணக்கான பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்தார். மும்பையில் இருக்கும் தனது அலுவலக கட்டிடத்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தங்க வைக்க வசதியாக மாற்றி மாநகராட்சியிடம் ஒப்படைத்தார். தற்போது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ஷாரூக்கான், “கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் துணிச்சலான சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், மருத்துவ அணிகளுக்கும் ஆதரவு தெரிவிப்போம். அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க நிதி தருவோம்.