தண்டையார்பேட்டை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சில கட்டுப்பாடுகளுடன் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் கட்டுப்பாடுகளை மீறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் அருகில் உள்ள பாண்டியாஸ் என்கிற பிரபல அசைவ ஓட்டலில் நேற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்ட நெரிசலுடன் வியாபாரம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.