பெரம்பூர்: சென்னை திருவிக நகர் பல்லவன் சாலையில் இருந்து சொகுசு கார் மூலம் வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும், அங்கிருந்த ஒரு கார் மின்னல் வேகத்தில் பறந்தது. போலீசார் விரட்டி சென்று, அந்த காரை மடக்கி பிடித்து, சோதனையிட்டபோது, அதில் மூட்டை மூட்டையாக 1050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை காருடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பெரம்பூர் திருவிக நகர் 20வது தெருவை சேர்ந்த அமுதா (39) மற்றும் கார் டிரைவர் பாண்டியன் (29) ஆகியோரை கைது செய்தனர்.