திருவள்ளூர்: தெற்கு ரயில்வேயில் தலைமை டிக்கெட் பரிசோதகராக பணிபுரிபவர் பரந்தாமன் (43). அரக்கோணத்தை சேர்ந்த இவர் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் பணியாற்றி வந்தார். ஊரடங்கு இருந்தாலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால் தினமும் பணிக்கு வந்து சென்றுக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று திருவள்ளூரில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதனால் திருவள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் ஒன்று ஒடிசா மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றது.