கொடைக்கானல்: கொடைக்கானலில் தோட்ட கலைத்துறை சார்பில் பராமரிக்கப்படும் தோட்டத்தில் பல வண்ண ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்செர்வேட்டரி பகுதியில் அரசு ரோஜா தோட்டம் உள்ளது. தோட்ட கலைத்துறை சார்பில் இந்த தோட்டம் பராமரிக்கப்படுகிறது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான இந்த தோட்டத்தில், 15 ஆயிரம் வகையான ரோஜா செடிகள் வளர்க்கப்படுகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா துறை சார்பில் கொடைக்கானலில் கோடை விழா நடத்தப்படும். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த தோட்டத்திற்கு வருகை தந்து, இங்குள்ள பல வண்ண ரோஜா பூக்களை கண்டு மகிழ்வர்.