சீர்காழி: டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் குறைந்து இருந்த குற்றங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே போதையில் இருந்த 3 பேர் கூலி தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். கூலி தொழிலாளி ஜீவானந்தத்தின் மகன் அலெக்ஸ்சாந்தரை தாக்கிய பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜுவை தட்டிக்கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிபோதையில் இருந்த ராஜி, ராஜு, ராஜேஷ் ஆகியோர் ஜீவானந்தத்தை கொலை செய்துள்ளனர்.