கடலூர்: கடலூரில் டாஸ்மாக் கடையில் போலி டோக்கனை 200-க்கு பெற்று மதுபாட்டில்கள் வாங்க முயன்ற 20 பேர் பிடிபட்டனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று காலை விற்பனை தொடங்கியது. தொடர்ந்து மது வாங்க வந்தவர்களிடம் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. போலீசார் முன்னிலையில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்ட நிலையில் மது பாட்டில்கள் வாங்குவதற்கு டோக்கன் பெற்றவர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.