பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு திருமலை நகர் பகுதியில் கடந்த 11ம் தேதி ₹75 லட்சம் மதிப்பிலான மீன் வலைகள் தீயில் எரிந்து நாசமானது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேற்று தமிழக பாஜ மீனவரணி தலைவர் சதிஷ்குமார், பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் மற்றும் மாவட்ட தலைவர் ராஜா ஆகியோருடன் நேரில் சென்று மீனவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.