சென்னை: கோயம்பேடு சின்மயா நகர் பகுதியை சேர்ந்த 43 வயது நபர், கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால், சக தொழிலாளர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, மேற்கண்ட நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 12ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை திடீரென மாயமானார்.