திருமலை: ஊரடங்கால் ஏழுமலையான் தரிசனம் கிடைக்கா விட்டாலும் கட, நெய்வேத்தியம் செய்யப்படும் லட்டு, வடை பிரசாதம் விற்பனைக்கு வந்துள்ளது.திருப்பதி என்றாலே லட்டுதான் நினைவுக்கு வரும். திருப்பதிக்கு வரும் யாரும் இதை வாங்காமல் செல்ல மாட்டார்கள். கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் 20ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. பக்தர்கள் இல்லாவிட்டாலும், சாமிக்கு வழக்கமாக நடக்கும் நித்திய பூஜைகள் நடக்கின்றன. தினமும் கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இதை பக்தர்களின் தரிசனத்துக்காக தேவஸ்தான டிவி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.