சென்னை: கொரோனா பரவல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன்; கோயம்பேடு வியாபாரிகளிடம் இருந்து பிற மாவட்டங்களுக்கு கொரோனா பரவியதாக பேசியது தவறு என்றார். கொரோனாவால் தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றியுள்ள சந்தையை மீண்டும் கோயம்பேட்டிலேயே செயல்பட வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.