சென்னை: சிஐடியு பொதுச்செயலாளர் சவுந்தரராசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு கேரளாவைப் போன்று கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு ஒரு சிறப்பு திட்டத்தை அறிவிக்கவும் தயாராக இல்லை. கொரோனா ஊடரங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை காரணம் காட்டி வேலைநேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக்கவும், தொழிலாளர் சட்டங்களை மூன்றாண்டுகளுக்கு செல்லாதாக்கவும், தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கவுமான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.