சென்னை: விழுப்புரத்தில் 10ம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆவடியை சேர்ந்த சுமதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக, பத்தாம் வகுப்பு படித்து வந்த ஜெய என்ற சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், சிறுமதுரை கிளை செயலாளர் கலியபெருமாள் இருவரும் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.