மே 17- தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் நாளை ஆலோசனை

சென்னை: மே 17- தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவலால் அமளிப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தற்போது 49 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 17-ம் தேதியோடு முடிவடைகிறது.  மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே நாளை சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: