கிருஷ்ணகிரி: கொரோனா ஊரடங்கால் மகாராஷ்டிராவில் தவித்த வந்த 252 பேர் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அவர்களுக்கு உணவு வழங்கி வேலூர், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பல்வேறு மாநிலங்களில் அவதிப்பட்டு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் சிறப்பு ரயில் மற்றும் பஸ் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, மகாராஷ்ரா மாநிலம் சதாரா பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்த தமிழகம், கர்நாடக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த 252 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அம்மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, மகாராஷ்டிரா அரசு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நேற்று 6 பஸ்கள் மூலம் 252 தொழிலாளர்களையும் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது.