லண்டன்: ‘‘கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஓராண்டு ஆகலாம் அல்லது கண்டுபிடிக்க முடியாமலே கூட போகலாம்,’’ என குண்டை தூக்கி போட்டுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 4வது இடத்தில் உள்ளது. அங்கு 2 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், இன்று முதல் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக 50 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார்.