கொரோனா நிவாரணத்துக்கு பாலிவுட் நடிகை 5 கோடி நிதி

கொரோனா நிவாரணத்துக்கு இந்தி நடிகை ஊர்வசி ரௌட்டெல்லா ₹5 கோடி நிதி வழங்கியுள்ளார். இந்தியில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஊர்வசி ரௌட்டெல்லா. ஊரடங்கு சமயத்தில் தான் கற்ற மேற்கத்திய நடனத்தை ரசிகர்களுக்கு கற்றுக்கொடுக்க அவர் விரும்பினார். டிக் டாக் செயலியில் நடனம் கற்க அவர் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி இதில் ஊர்வசியை பின்பற்று பவர்களில் 1 கோடியே 80 லட்சம் பேர் இணைந்தனர். இந்த நடன வகுப்புகள் மூலம் ஊர்வசி பணம் சம்பாதித்தார். இதன் மூலம் கிடைத்த தொகையான 5 கோடியை அவர், கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Related Stories: