புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட 3ம் கட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிய உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மே 17ம் தேதிக்கு பிறகு என்ன செய்யலாம், ஒவ்வொரு மாநிலத்திற்கு என்னென்ன தளர்வுகள் தேவை என வரும் 15ம் தேதிக்குள் அனைத்து மாநில அரசுகளும் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், ஊரடங்குக்குப் பிறகு என்ன செய்யலாம் என பொதுமக்களே சிறந்த பரிந்துரைகளை வழங்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.