மாலே: இந்திய கப்பற்படை கப்பலான கேசரி மாலத்திவில் வசிக்கும் இந்தியர்களுக்கு தேவையான உணவு பொருட்களை ஏற்றிக் கொண்டு மாலே துறைமுகத்துக்கு சென்றடைந்தது. சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி வருவது போல மிஷன் சாகர் திட்டத்தின் கீழ் நட்பு நாடுகளுக்கும் மருத்துவ உபகரணங்களையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகிறது.