சென்னை: கொரோனாவால் துபாயில் சிக்கி தவித்த 359 தமிழர்கள் சென்னை வந்தனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் வெளிநாடு சென்ற இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வர முடிவில்லை. அவர்களை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரவேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.அதன்பேரில் சிறப்பு விமானங்கள் மூலம் கடந்த 7ம் தேதியிலிருந்து வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வருகிறது. அதைப்போல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களும் சென்னை, திருச்சிக்கு அழைத்து வருகின்றனர்.கடந்த 8ம் தேதி துபாயிலிருந்து 2 விமானங்களில் 359 தமிழர்கள் சென்னை அழைத்துவரப்பட்டனர்.