ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் அக்கம்மாபுரம் ஊராட்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரியில் 3 மதகு, ஒரு கலங்கல் உள்ளன. இந்த ஏரி, அதே பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் ஏரியின் கரை, கலங்கல், மதகுகள் கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடந்தது. இதனால் ஏரியை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ 57.61 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் ஏரி சீரமைப்பு பணி நேற்று நடைபெற்றது.