போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்: மீண்டும் இயங்கத் தொடங்கிய தமிழ் சினிமா

சென்னை: ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் திரைப்பட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. விஷால் நடித்த சக்ரா, த்ரிஷா நடித்த ராங்கி படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தொலைக்காட்சித் தொடர்களின் டப்பிங் பணிகளும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விரைவில் தொலைக்காட்சித் தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளன.

Related Stories: