சென்னை : ரயில் போக்குவரத்தைப் போல பஸ், விமான சேவைகளையும் தொடங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் வரும் 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனிடையே லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து 15 நகரங்களுக்கு முதல் கட்டமாக பயணிகள் ரயில் போக்குவரத்து இயக்கப்பட உள்ளது. இது படிப்படியாக முழுமையான நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது.