சென்னை: மயிலாப்பூர் சாந்தோம் சர்ச் அருகே ஆதரவற்ற முதியவர் தங்கப்பன் தனது மனைவியுடன் நடைபாதையில் வசித்து வந்தார். வறுமையில் தவித்த இவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தினமும் உணவு வழங்கி வந்தனர். இந்நிலையில் தங்கப்பன் நேற்று காலை தூக்கத்திலேயே இறந்தார். இதை பார்த்து அவரது மனைவி அழுது கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் கொரோனா அச்சம் காரணமாக மாலை 4 மணி வரை சடலத்தை மீட்க வரவில்லை.