பெய்ஜிங்: சீனாவில் புதிதாக 17 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 82,886 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 4,633 பேர் உயிரிழந்துள்ளனர். மாகாண தலைநகர் வுகானில் ஏப்ரல் 8ம் தேதி முதல் ஊரடங்கு நீக்கப்பட்டது. கடந்த 34 நாட்களாக ஹூபெய் மாகாணத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்படவில்லை.