சென்னை: தமிழகத்தில் மே 17ம் ேததிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்படும் நிலையில் மே 20ம் தேதிக்கு பிறகு சில கட்டுப்பாடுகளுடன் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரயில்களில் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணிய வேண்டும், டிக்கெட் கவுன்டர்களில் 6 அடி இடைவெளியில் நிற்க வேண்டும், 4 பேர் இருக்கையில் 2 பேர் அமர வேண்டும், முன்பதிவில்லா பெட்டிகள் ரத்து செய்யப்படும், ரயில் நிலையங்களுக்கு பயணிகளை தவிர மற்ற நபர்கள் வரக்கூடாது இவ்வாறு சில கட்டுப்பாடுகளை விதித்து அதன் அடிப்படையில் படிப்படியாக ரயில் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.