கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி கிராமத்தில் மதுபானக்கடை நேற்று காலை திறக்கப்பட்டது. பல்வேறு கிராமங்களை சார்ந்த மக்கள் இப்பகுதிக்கு மதுபாட்டில்கள் வாங்க வந்ததால் வைரஸ் தொற்று தங்கள் கிராம மக்களை பாதிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக கடையை திறக்க கூடாது என பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த இடத்தில் போராட அனுமதி கிடையாது என காவலர்கள் தடுத்ததால் பொதுமக்கள் காவலர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து காவலர்கள் பொதுமக்கள் மீது சிறிதளவு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தகவல்அறிந்து ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜ் வந்தார்.