பெரம்பூர்: கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி சிவானந்தம் தெரு பகுதியை சேர்ந்த 39 வயது நபருக்கு கடந்த ஒன்றரை வருடமாக பிரைன் டியூமர் மற்றும் கேன்சர் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 21ம் தேதி காலை இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 23ம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், 25ம் தேதி அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்தது.