ஊரடங்கில் நடிகைகள் பலரும் பலவித வேலைகளில் ஈடுபட, நடிகை கீர்த்தி பாண்டியன் விவசாயம் செய்து வருகிறார். நடிகர் அருண் பாண்டியனின் மகள், கீர்த்தி பாண்டியன். இவர், தும்பா படத்தில் நடித்தார். இப்போது பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்குக்கு முன்பே தனது அப்பா அருண் பாண்டியனின் ஊருக்கு சென்ற கீர்த்தி, அங்கு தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன் டிராக்டரை ஓட்டியபடி நிலத்தை உழுவதுபோல் அவர் படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் வயலில் நாற்று நடும் வேலைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.